Home இரகசியகேள்வி-பதில் நானும், அவளும் நிறைய இடத் திற்கு சென்று, தனிமை யில் இருந்திருக்கி றோம்.

நானும், அவளும் நிறைய இடத் திற்கு சென்று, தனிமை யில் இருந்திருக்கி றோம்.

82

0Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil,எனக்கு, வயது, 24. மாதம், இருபது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், உ.பி.,யில் வேலை செய்து வருகிறேன். இதற்கு முன், புதுச்சேரி யில், ஒரு கம்பெனி யில் வேலை செய்யும் போது, எனக்கு, ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. நானும், அவளும் நிறைய இடத் திற்கு சென்று, தனிமை யில் இருந்திருக்கி றோம். அவள் வீட்டுக் கும் என்னை நன்றாக தெரியும். காதலனாக அல்லாமல், நண்பனாக, அவள் வீட்டிற்கு அடி க்கடி செல்வதும் உண் டு.
சமீபத்தில், அவளுக்கு திருமண ஏற்பாடு செய்து, மாப்பிள்ளை பார்த்து இருக்கின்றனர்; ஆனால், அவள் என்னிடம் சொல்லவே இல்லை. அப்போது, நான் உ.பி.,க்கு வந்து விட்டேன். தின மும் என்னிடம் குறைந் தது, இரண்டு மணி நேரமாவது பேசுவாள்; ஆனால், திடீரென பேசும் நேரம் குறைந்தது. நான் கேட்ட போது, “வீட்டில் பேச விடமாட் டேன் என் கின்றனர்…’ என்றாள்.
மாப்பிள்ளை பையனிடம், அதிகம் பேசி கொண்டு இருந்திருக் கிறாள்; ஆனால், என்னிடம் பேசும் போது, எப்போதும் பேசுவது போல் பேசினாள்; போனில் முத்தம் கொடுத்தாள். நானும் சந்தேகப் படவே இல்லை. அவள், பி.ஏ., தொலை தூர கல்வி பயின்றாள். அவளுக்கு பரிட்சை இருப்பதாக சொல்லி, என்னை தமிழகத்துக்கு வரச் சொன்னாள்; நானும் கம்பெனியில் விடுமுறை கேட்டு வந் தேன். சொன்னபடி நானும், அவளும் செஞ்சி மலைகோட்டைக்கு சென்றோம். இந்த முறையும், முன் இருந்தது போல் மிகவும் நெருக்கமாக இருந்தாள்.
மாலை, திரும்பி வந்து விட்டோம். பஸ்சில் இருவரும் அருகருகே அமர்ந்து இருக்கும் போது, எங்கள் பக்கத்து இருக்கையில் ஒருவன் வந்து அமர்ந்தான். அவனை பார்த்ததும், இவள் கீழே இறங்கி விட் டாள்; நானும் வந்து விட்டேன். வேறு பஸ்சில் சென்று அமர்ந் தோம். நான், “யார் அவன்?’ என்று கேட்டேன். அதற்கு, “அவன், எங் கள் பக்கத்து கிராமம்; எங்கள் வீட்டில் சொல்லி விடுவான்…’ என்று சொன்னாள்.
மீண்டும், உ.பி.,க்கு வந்து விட்டேன். அதன் பிறகும் என்னிடம் நன்றாகத்தான் பேசினாள். அன்று இரவு, ஒரு மணி நேரம் தொடர் ந்து வெய்ட்டிங் கால் வந்தது. தொடர்ந்து முயற்சி செய் தும், லைன் கிடைக்கவில்லை அதன்பிறகு, நான் போன் செய்யவில்லை.
இரவு, 9:30 மணிக்கு, “சாரி’ என்று எஸ்.எம்.எஸ்., அனுப்பினாள். மறுநாள் காலை அவளாகவே போன் செய்து, “நாம் வெளியில் சென்றது எல்லாம் எங்கள் வீட்டிற்கு தெரிந்து விட்டது. இனிமேல் உன்னிடம் பேச விட மாட்டார்கள். வீட்டில் யாரும் இல்லாத நேரத் தில், நானே போன் செய்கிறேன். நீ போன் செய்ய வேண்டாம்…’ என்று கூறினாள். அதன் பிறகு, இரண்டு நாள் போன் செய்யவே இல்லை.
நானே அவள் வீட்டிற்கு போன் செய்து, அவள் அம்மாவிடம் பேசினேன். “ஏன், அவளை என்னிடம் பேசக் கூடாது என்று தடுக்கி றீர்கள்?’ என்று கேட்டேன். “அவளுக்கு, திருமணம் செய்யப் போகி றோம்…’ என்று கூறினார். “நானே அவளை திருமணம் செய்து கொள்கிறேன்…’ என்று கூறினேன். “அதெல்லாம் முடியாது…’ என்று அவர் கூறி விட்டார். ஆனால், இவள் எல்லாரிடமும், “அவனை, லவ் பண்ண வில்லை; நண்பனாகத்தான் பழகினேன்…’ என்று கூறி யிருக்கிறாள். அதன்பின், என்னை ஒரு வன் தொடர்பு கொண்டு, இதுகுறித்து விசாரித்தான்; எனக்கு கோபம் வந்து விட்டது. கம் பெனியில் வேலை செய்யும் வேறு ஒருவரின் போனிலிருந்து அவளிடம் பேசினேன். “நீ என்னை லவ் பண்ணல? என் கூட வெ ளியில் எங்கும் வரல?’ என்று கேட்டேன். அதற்கு அவள், “லவ் பண் ணினேன்தான்; எல்லா இடத்திற்கும் வந்தேன்தான்…’ என்று கூறி னாள். அதை, நான் பதிவு செய்து, என்னிடம் கேட்டவனிடம் பதிவு செய்ததை போட்டு காட்டினேன்.
நான், அவள் தோழிகளிடம் தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்ளப் போகும் அவனின் போன் நம்பர் கேட்டேன்; ஆனால், அவ னே என்னை தொடர்பு கொண்டான். பஸ்சில் எங்களை ஒன்றாக பார்த்தவன் தான், அவளை திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளை என்று, அவனே சொன்னான்.
அதன்பிறகு, திருமணம் செய்து கொள்ளப் போகும் அவன், தினமும் என்னை தொடர்பு கொண்டு, அவளை பற்றிய எல்லா உண்மை களையும் என் மூலமாகவே தெரிந்து கொண்டான்; ஆனால், தற் போது அவன் பேசுவது கிடையாது.
என்னிடம் பொய் சொல்லி, அவளைப் பற்றி என்னிடம் எல்லா உண்மைகளையும் வாங்கி, அவளையே திருமணம் செய்யப் போகி றான். இதை நினைத்தால், எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.
நான் செய்தது தவறா, சரியா என்று தெரியவில்லை. கோபத்தில் தான், அவள் பேசியதை பதிவு செய்தேன். எப்படியாவது இந்த உண்மை தெரிந்தால், எனக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார் களா என்றுதான் நான் அனைவரிடமும் சொன்னேன்.
இந்த நிமிடம் வரை அவளை என் கண்ணில் வைத்துதான் பார்த்து கொண்டு இருக்கிறேன். நான், மூன்று வருடங்களாக எனக்காக வாழ்ந்ததை விட, அவளுக்காக வாழ்ந்தது தான் அதிகம். அவள் என்ன சொன்னாலும் செய்வேன்; எது கேட்டாலும் வாங்கி தரு வேன். இப்போதும் கூட, எந்த நிலைமையிலும், சூழ்நிலையிலும் அவளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். அம்மா… நான் சிறு தவறு செய்து விட்டேன். அவளுக்கு திருமணம் என தெரிந்த வுடன், உ.பி.,யில் தற்கொலை முயற்சி செய்து, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன். அவளை நினைத்த என் மனம், வேறு ஒரு பெண்ணை நினைத்து கூட பார்க்காது.
நான் எஸ்.சி., வகுப்பை சேர்ந்தவன்; அவள் எம்.பி.சி., இது, நாங்கள் காதலிப்பதற்கு முன்பே அவளுக்கும், அவள் வீட்டிற்கும் தெரியும். நான் டி.எம்.இ., படித்துள்ளேன்; ஆனால், அவளை திருமணம் செய் து கொள்ளப் போகும் அவன் படிக்கவில்லை; மெக்கானிக். எல்லா கெட்டப் பழக்கங்களும் அவனுக்கு உண்டு.
தயவுசெய்து, உங்கள் பதில் மூலம் அவளுக்கும், அவள் குடும்ப த்திற்கும் நல்ல அறிவுரை வழங்குங்கள்.
— இப்படிக்கு,
கண்ணீருடன் உங்கள் மகன்.
அன்புள்ள மகனுக்கு —
உன்னுடைய நீண்ட கடிதத்தை முழுவதுமாக படித்தேன்.
உன்னிடம், மூன்று வருடம் பழகிய காதலி, இன்னொருவனை மண ந்து கொள்ள மனதார சம்மதித்து விட்டாள். திருமணத்திற்குப் பின் ஓடிப் போகாமல், திருமணத்திற்கு முன் விலகி விட்டாள். “எங்கிரு ந்தாலும் வாழ்க…’ எனக் கூறி, அவளிடமிருந்து விலகா மல், செஞ்சி வரவழைத்து ஏன் உறவு கொண்டாய்?
நீ உ.பி.,யில் இருக்கிறாய்; அவள் புதுச்சேரியில் இருக்கிறாள். மூன்று வருடம் பழகிய அவளுக்கு உன் பிளஸ், மைனஸ் நன்றாக தெரியும். அனைத்தையும் கணக்கில் கொண்டுதானே உன்னை வேண்டாம் என்கிறாள். ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்?
உன்னுடனான காதலை, வீட்டில் நட்பு என கூறியிருக்கிறாள் என் றால், உன் காதலை அவள் சீரியசாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்று தானே அர்த்தம்; வெறும் பொழுதுபோக்கு.
பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்; பல வந்த மாய் யாரையும் அன்பு பாராட்ட வைக்க முடியாது. அவளின் வருங் கால கணவனுக்கு உனக்கும், உன் காதலிக்கும் இடையே ஆன உற வை வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தது மன்னிக்க முடியாத குற் றம். கடிதத்தில் நீ வேறு மாதிரியாக சொல்லியிருந்தாலும், இது, அப்பட்டமான பிளாக்மெயில்; பழிக்குப் பழி வாங்கும் செயல்.
உன்னுடைய காதலியை மணந்து கொள்ள மாட்டேன் என, பொய் வாக்குறுதி அளித்து, உன்னை ஆழம் பார்த்திருக்கிறான் அந்த மெக் கானிக் மாப்பிள்ளை; எத்தனுக்கு எத்தன், ஜித்தனுக்கு ஜித்தன்.
உனக்கு இப்போது என்ன வெறி தெரியுமா? “ஆஹா… இவ்வளவு போட்டுக் கொடுத்தும் மெக்கானிக் கல்யாணத்தை தடுத்து நிறுத்த வில்லையே; நிறுத்தியிருந்தால் மீண்டும் மணம் பேச வாய்ப்பு கிடைத்திருக்குமே? நினைத்ததை அடைந்ததோடு, தியாகியும் ஆகி யிருக்கலாமே! “செகண்ட் ஹாண்ட்’ விரும்பி போலும் அந்த மெக் கானிக் …’ என, பொருமுகிறாய்.
எல்லா உண்மையும் தெரிந்த மெக்கானிக், திருமணத்திற்கு பின் இவைகளையெல்லாம் சொல்லி, சொல்லி காதலியை சித்திரவதை செய்வானோ என பயப்படுகிறேன் என கூறுகிறாய்; முதலைக் கண் ணீர் விடுகிறாய். திருமணத்திற்கு பின் அவளை, அவன் டார்ச்சர் செய்ய வேண்டும் என்று உன் ஆழ் மனம் விரும்புகிறது.
உன்னுடைய குடும்பத்தாரை பற்றி நீ கடிதத்தில் ஒன்றுமே குறிப் பிடவில்லை. யாருமே இல்லையா அல்லது உன்னை கைகழுவிவி ட்டனரா? உன் சொந்த ஊர் எது? உன் குடும்ப அங்கத்தினர் யார், யார்? என்ற தகவலும் உன் கடிதத்தில் இல்லை.
அவளை இப்படி பார்த்துக் கொள்வேன், அப்படி பார்த்துக் கொள் வேன், எந்த நிலையில் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். அவளுக்கு அதை கொடுப்பேன், இதை கொடுப்பேன் என்றெல்லாம் கூறுகிறாய். விருந்துக்கு வர மறுக்கும் விருந்தாளிக்கு, விருந்து ஐட்டங்கள் பற்றிய பட்டியல் எதற்கு?
மகனே… இதுவரை கசப்பு மருந்து புகட்டினேன்; இனி, மலைத்தேன் ஊட்டி விட போகிறேன்…
நீ, அந்தப் பெண்ணை மணந்தாலும், மகிழ்ச்சியாக இருக்க மாட்டா ய். நடந்தது எல்லாம் நல்லதற்கே. வேலையை அவள் ஊர் அல்லாத தமிழ்நாட்டு ஊருக்கு மாற்றி வாங்கு. உங்களுடைய காதலில் இரு வருமே குற்றவாளிகள். அவள் மீதான பழிவாங்கும் எண்ணத்தை விட்டுத் தள்ளு. நேர நேரத்துக்கு உணவு உட்கொண்டு, நார்மலான உடல் எடைக்கு மீள். அவளது திருமணத்திற்கு போகாதே. புதிய பிர ச்னை எதனிலும் ஈடுபடாதே. அவள் தொடர்பான கடிதங்களை, புகைப்படங்களை, எம்.எம்.எஸ்.,களை அழித்தொழித்து விடு. புலம் பலையும், சுய பச்சாதாபத்தையும் விடு.
உன் பெற்றோரிடம் கலந்தாலோசித்து, அவர்கள் பார்க்கும் பெண் ணை மணந்து கொள்.