Home அந்தரங்கம் திடீரென பொது இடத்தில் கா ம உணர்வு வந்தால், எப்படி அணுக வேண்டும்? இது தெரியாமல்...

திடீரென பொது இடத்தில் கா ம உணர்வு வந்தால், எப்படி அணுக வேண்டும்? இது தெரியாமல் யாரும் கை, கால் வெச்சுக்கிட்டு சும்மா இருக்கறதில்ல!

168

முழுவதுமாக நனைந்த பிறகு முக்காடு போட்டுக்கொண்டால், எந்தவித பிரயோஜனமும் இல்லை. ஒருமுறை காம உணர்வை பொது இடத்தில் வெளிகாட்டி, கெட்டபெயர் வாங்கிவிட்டால், இதுவரை கட்டிக்காத்து வந்த மொத்த நற்பெயருக்கும் களங்கம் வந்துவிடும். எவனோ ஒரு உதாரி சொல்கிறான் என, தன்னுடன் உயிருக்கு உயிராக பழகும் தோழியிடம் காமத்தை எதிர்பார்த்தால், அது பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை கிழித்து முட்டையை வெளியே எடுப்பதற்கு சமமாகும். இந்த பாய் பெஸ்டி வீடியோவில், ஆண் பெண் நட்பை தவறாக சித்தரித்து போடுவதை பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது.

அந்த மாதிரியான வீடியோக்களால் வந்த வினையால், தோழியை கூட தவறாக அணுகும் சில ஜடங்களை நிஜ வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. வெறும் உடலோடு, உடல் உரசுவது மட்டும் தான் காமம் என்பதல்ல. இரு உயிர்கள் கூடி முயன்று பெறுவது. அதனை வற்புறுத்தி பெற நினைப்பது அபத்தம். உலகில் எல்லா உயிர்களுக்கும் காம உணர்வு இயல்பாகவே வரும் என்றாலும், அதனை எந்த இடத்தில், எப்படி அணுகுகிறோம் என்பதில் தான் உயிரினங்களுக்கு உயிரினம் வேறுபாடு உண்டாகிறது.

உறவு கொள்வதை நாய் இனத்தை வைத்து இழிவாக சித்தரிக்கின்றனர் சிலர், அந்த நாய் கூட, தன்னை கவர்ந்த இணையுடன் தான் உறவு கொள்ளுமே தவிர, மனித இனம் போல வற்புறுத்தி இணையாது. உண்மையான காமம் என்பது அமைதியான சூழலில் மட்டுமே கிடைக்கக்கூடியது. முதலில் மனம் சேர்ந்து, பிறகு உடல் சேர்ந்து, இறுதியில் மனமும்-உடலும் இரண்டற கலந்து முடிவுக்கு வரும் போது மட்டுமே, உச்சகட்ட இன்பம் கிடைக்கும். அதனைத்தாண்டி முறைகேடாக வழியில் உண்டாகும் எந்த உறவும், ஆர்வக்கோளாறால், உடல் ஆசையை மட்டுமே தனிக்குமே தவிர, மனதுக்கு நிம்மதி என்பதே இருக்காது.

பொது இடத்தில் காம உணர்வு வருகிறதென்றால், உடலுக்கு இச்சை தேவைப்படுகிறது என்று அர்த்தம். உடல் சொல்வதை கேட்டு அங்கு வரம்பு மீறினால், வாழ்நாள் முழுக்க மனம் துடிக்க வேண்டி வரும். முதலில் அந்த எண்ணம் எதனால் வருகிறது என்று யோசியுங்கள், நிச்சயம் ஏதாவது ஒன்றால் தூண்டப்பட்டிருப்பீர்கள். அது ஒரு காட்சியால் இருக்கலாம், ஒரு படத்தால் இருக்கலாம் அல்லது ஒரு மனிதரால் இருக்கலாம். அந்த இடத்தில் சல்லாபம் தேவை தானா? என்று யோசித்து பாருங்கள்.

ஒரு கட்டத்தில் உங்கள் மூளையே சொல்லும், “நீ வந்த வேலை வேறு, நீ பார்க்கும் வேலை வேறென”. என்னைக்கு உடல் சொல்வதை கேட்க மறுத்து, மனதிடமும் ஒரு வார்த்தை கேட்க ஆரம்பிக்கிறோமோ, அன்னைக்கு தான் முழு மனிதனாக மாறுவோம். அதுவரையில் மற்ற விலங்குகளை போலத்தான் நாமும். போன தலைமுறையை விட இந்த தலைமுறையிடம் காமஉணர்வு மேலோங்கிவிட்டது. எல்லை மீறிவிட்டால், இந்த இணைய உலகில் தப்பிக்கவே முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.