Home இரகசியகேள்வி-பதில் அவள் மேல் உள்ள காமத்தைத் தான் காட்டுகிறதே தவிர, காதலைக் காட்டவில்லை!

அவள் மேல் உள்ள காமத்தைத் தான் காட்டுகிறதே தவிர, காதலைக் காட்டவில்லை!

100

pic_43_bigkasuthiram,tamilkamasoothiram,kasoothirakathaikal,kamam,muthaluravu,kamakathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal ,udaluravu,sexgame,sakilasex,அன்புள்ள சகோதரி —
நான் அரசு ஊழியர்; என் தாய் மாமாவிற்கு நான்கு பெண்கள்; மூத்த பெண், அரசு மருத்துவமனையிலும், அடுத்த பெண், வீட்டு வசதி வாரியத்திலும் பணி செய்கின்றனர். மற்ற இரண்டு பெண்கள் படித்துக் கொண்டு இருந்தனர்.
இச்சம்பவம், 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. என் தாய் மாமா, தன் மூத்த மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னைக் கேட்டார். அப்போது, அந்தப் பெண்ணின் வயது 24; என் வயது 28. என் குடும்ப சூழ்நிலை கருதி, ஆயா பணிசெய்யும் பெண் வேண்டாம் என்றுகூறி, மாமாவின் இரண்டாவது பெண்ணை (வீட்டு வசதி வாரியத்தில் பணி செய்பவரை) மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்தேன். அப்போது, அந்த பெண்ணின் வயது, 22. என் அத்தைக்கும், மற்ற இரு பெண்களுக்கும், எனக்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை.
என் தாய் மாமா மட்டும்தான், பெண்ணை எனக்கு திருமணம் செய்து தர விருப்பப்பட்டார். இவ்வாறான அதிருப்தி காரணமாக, நான் அப்பெண்களை திருமணம் செய்ய மறுத்து விட்டேன். நான் விருப்பப்பட்ட மாமாவின் இரண்டாவது பெண், வேறு ஜாதி நபர் ஒருவரை காதலித்து, இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டாள்.
திருமண வாழ்க்கை சரியானபடி அமையவில்லை. குடிகார கணவர்; சரியான வேலையோ, வருமானமோ இல்லை. சதா சண்டை சச்சரவுடன் நாட்களை ஓட்டினார். இந்நிலையில் குழந்தைகளும் பிறந்தன. அவரது கணவருக்கும் அரசுத் துறையில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால், வருவாயை தவறான வழியில் செலவிட்டதுடன், சின்ன வீடு ஏற்படுத்திக் கொண்டு, உடல் நலிவடைந்து இறந்து விட்டார்.
பாதிக்கப்பட்ட என் மாமா மகள், என்னை அழைத்து, தன் கணவர் சார்பாக, தனக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை வாங்கி தரும்படி கேட்டுக் கொண்டார். அதன் பேரில் உதவி செய்தேன். இதன் காரணமாக, எங்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, பலமுறை உடல் உறவு கொண்டோம்.
தற்போது, அனைத்து பணப்பலன்களையும் பெற்றுக் கொண்ட அவள், என்னை வெறுத்து ஒதுக்குகிறாள். என்னோடு பழக, பேச, உறவு கொள்ள மறுக்கிறாள்.
நான் இந்த சிறிது கால பழக்கத்தில், அவள் மீது அளவற்ற அன்பு ஏற்பட்டு, பித்து பிடித்தவன் போல் ஆகிவிட்டேன். அப்பெண் இல்லாவிடில், எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் உள்ளது. எனக்கும் திருமணம் ஆகி மனைவி உள்ளார். மனைவியிடம் இல்லாத சுகத்தை, அப்பெண்ணிடம் காண்கிறேன். அவளது பாழ்பட்டுப் போன வாழ்க்கைக்கு, முற்றுப் புள்ளி வைத்து, அவளை மனம் கோணாமல் மகிழ்விக்க நினைக்கிறேன்.
என் எண்ணம் சரியா? அப் பெண்ணிற்கு எப்படியும் ஓர் துணை தேவைதானே! அவளது சுகதுக்கங்களில் கலந்து கொண்டு, அவள் வாழ்க்கையை, இனிதாக்க நினைக்கிறேன். உங்களின் ஆலோசனை எனக்குத் தேவை. உங்கள் எண்ணப்படி நடப்பேன். காசு, பணம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.
உங்கள் சகோதரன்.

அன்பு சகோதரருக்கு,
‘தாய் மாமா மகளின் பாழ்பட்டு போன வாழ்க்கைக்கு, முற்றுப் புள்ளி வைத்து, அவளின் மனம் கோணாமல், அவளது வாழ்க்கையை இனிதாக்க நினைக்கி றேன். உங்களின் ஆலோசனை தேவை…’ என்று, மனம் நெகிழ்ந்து, உதவும் மனப்பாங்குடன் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். உங்களின் ஈகை குணத்தையும், உணர்வுகளையும் நன்கு உணர்கிறேன். விதவைக்கு மறுவாழ்வு தர முன் வந்திருக்கும் உங்கள் எண்ணத்தை பாராட்டுகிறேன். சரி. உங்களது தற்போதைய நிலை, பிரச்னைகளை ஆராய்வோம்…
* வாலிபத்தில், மாமாவின் இரண்டாவது மகளின் மீது விருப்பம் இருந்தாலும், அவளை திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை…
* மாமா பெண் கிடைக்காது என்று தெரிந்தவுடன், இன்னொரு பெண்ணை மணந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்துள்ளீர்கள்; நிம்மதியாகவும் இருந்துள்ளீர்கள்…
* உங்களது மாமா பெண்ணும், அவராகவே முடிவெடுத்து, காதல் திருமணம் செய்து, குழந்தைகளுடன் வாழும் நேரத்தில், துரதிர்ஷ்டமாக அவளது கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். எனவே, பிரச்னைகள் அதிகமாகியிருக்கின்றன.
* கணவர் இறந்ததால், பணப் பலன்களை வாங்கித் தரும் உதவி மூலமாக, பல ஆண்டுகளுக்கு பின், மாமா பெண்ணுடன், இரண்டாம் அத்தியாயம் ஆரம்பித்துள்ளது.
* இப்போது, ‘வாழ்க்கை தருகிறேன்… நான் செய்வது சரியா?’
என்று, அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டுள்ளீர்கள். ‘காதல்’ என்பது, ஆண்-பெண் இருவரும் சேர்ந்து அன்பு செலுத்துவது, விட்டுக் கொடுப்பது, புரிந்து கொள்வது, பெருந்தன்மையாக இருப்பது. இதில், இரண்டு கைகளும் சேர்ந்தால் தான், ஒலி வரும். ஒருவர் மாத்திரம் நினைத்து ஏங்குவது, நடைமுறைக்கு ஒத்து வராதது.
மாமாவின் இரண்டாவது பெண் கிடைக்காது என்ற நிலையில், அவளது கணவர் இறந்ததும், உங்கள் மீது நம்பிக்கை கொண்டு உதவி கேட்டு வந்ததை பயன் படுத்திக் கொண்டது, அந்த காலத்தில் கிடைக்காத அல்லது கனவு கண்ட ஒன்று, இப்பொழுது கிடைத்தவுடன், விசுவரூபம் எடுத்துள்ளது. அப்பெண்ணுக்கு சேர வேண்டிய பணத்தை, நீங்கள் வாங்கி தந்தவுடன், இணங்க மறுப்பது, அவள் கொண்டுள்ள, ‘வியாபார உறவைத்தான்’ காட்டுகிறதே தவிர, உண்மையான காதலை அல்ல. எப்படியாவது, யார் மூலமாவது பணம் கிடைத்தால் போதும் என்று கருதி, இக்காரியத்துக்கு அவள் இணங்கியிருக்கலாம்.
கடிதத்தில், ‘காசு பணத்தை எதிர்பார்க்கவில்லை… அவளின் வாழ்க்கையை இனிதாக்கவே விரும்புகிறேன்…’ என்று, எழுதியுள்ள நீங்கள், ‘என் மனைவியிடம் கிடைக்காத சுகத்தை அப்பெண்ணிடம் காண்கிறேன்; அவள் மீது பைத்தியமாக இருக்கிறேன்’ என்றெல்லாம் எழுதியிருப்பது, உங்களுக்கு அவள் மேல் உள்ள காமத்தைத் தான் காட்டுகிறதே தவிர, காதலைக் காட்டவில்லை. உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன். அதற்கு உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல், ஆழமாக யோசித்து, மனதை ஒருநிலைப்படுத்தி, உண்மையான பதில்களை தேடுங்கள்.
* விதவையாகிவிட்ட மாமா பெண்ணை மணக்க இருக்கிறேன் என்று, உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளிடம் வெளிப்படையாக சொல்ல முடியுமா?
* நீங்கள் விரும்பும் இந்த உறவு, நடை முறைக்கு ஒத்து வருமா? இந்த உறவால், குடும்பத்தில், அலுவலகத்தில், சமுதாயத்தில் ஏற்படும் அவதூறுகளையும், பிரச்னைகளையும் சமாளிக்கக் கூடிய மனபக்குவம் இருக்கிறதா?
* அந்த பெண்ணுக்கு உங்களை மணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதா? உலகத்தில் யாரையாவது கட்டாயப்படுத்தி காதலிக்கச் சொல்ல முடியுமா?
* கணவர் இறந்ததால் கிடைக்கும் பணத்தை வைத்து, எப்படியாவது குழந்தைக ளை வளர்த்து ஆளாக்கி விட வேண்டும் என நினைத்து, உங்களிடம் உதவி கேட்டு வந்திருக்க கூடுமல்லவா?
* இதே மாதிரி உதவி கேட்டு மற்றுமொரு பெண் உங்களிடம் வந்தால், இப்போ உள்ள மாமா பெண்ணை விட்டு விட்டு, அவளிடம் இதே டயலாக்கை விட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?
* வாழ்க்கை துணையை இழந்து, மீண்டும் வாழ நினைத்து, உங்களிடம் உதவி, அபயம் கேட்டு வந்த நபரையே, ‘உபயோகித்துக்’ கொண்ட உங்களின் நடத்தை, பாராட்டுதற்கு உரியதா?
இக்கேள்விகளுக்கான பதில்கள் நிச்சயமாய் உங்களிடம் தான் இருக்கின்றன. பதில்களை ஒரு தாளில் எழுதி, உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள் அல்லது மனநல ஆலோசகர்கள், குடும்பத்தில் உள்ள மூத்த அனுபவ சாலிகள் உதவியுடன் சரியான வாழ்க்கை முறையை திட்டமிடுங்கள்.
உண்மையிலேயே, மற்றவர்கட்கு உதவி செய்யும் நல்ல எண்ணம் உங்களுக்கு இருந்தால், அது மென்மேலும் வளர்ந்து, நீங்கள் நல்ல நிலைக்கு உயர வாழ்த்துகள்.