Home சூடான செய்திகள் அதிக நேரம் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு மாத்திரிகளை உட்கொண்ட கல்லூரி காதல் ஜோடி பலி

அதிக நேரம் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு மாத்திரிகளை உட்கொண்ட கல்லூரி காதல் ஜோடி பலி

22

Captureநைஜீரியாவில் உள்ள அனம்பரா மாநிலத்தில் உள்ள பல்கலை கழகத்தை ஒட்டியுள்ள மாணவர் விடுதியில் ஒரு காதல் ஜோடி கட்டி பிடித்தப்படி பலியான சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நைஜீரியா நாட்டில் உள்ள அனம்ப்ரா என்ற மாநிலத்தில் அரசு பல்கலை கழகம் உள்ளது. இந்த கல்லூரி வளாகம் அருகே மாணவர் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. அடுத்த அறையில் தங்கியிருந்த மாணவர்கள் குறிப்பிட்ட அறைக்கு சென்று சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மாணவர் தங்கியிருந்த விடுதியின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அதில் மாணவர் ஒருவர், மாணவி ஒருவரும் கட்டிலில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது கட்டிலில் சில மாத்திரைகள் சிதறி கிடந்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் டாக்டர்கள் உதவியுடன் மருந்துகளை ஆய்வு செய்தனர். ஆய்வு செய்ததில் அது உணர்ச்சிகளை அதிகப்படுத்தும் மாத்திரை என்று கண்டு அறிந்தனர். உல்லாசத்தில் இருந்த காதல் ஜோடி நீண்ட நேரம் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பேரும் பலியானார்கள். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் பலியான மாணவி இமோ மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் ஜோடி ஒன்று மாணவர் விடுதியில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளாது.